அனைவருக்கும் வீடு திட்டத்திற்கான தேசிய வீட்டுவசதி நிதியம்

அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு நிதி அளிப்பதற்காக 60 ஆயிரம் கோடி மதிப்பில், தேசிய நகர்ப்புற வீட்டு வசதி நிதியம் ஏற்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அமைச்சரவையானது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு நிதி அளிப்பதற்காக 60 ஆயிரம் கோடி மதிப்பில், தேசிய நகர்ப்புற வீட்டு வசதி நிதியம் (National Uban Housing Fund NH-UF) ஏற்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அரசு அமைப்புகள்
NUHF அமைப்பானது மூலப்பொருட்கள் உருவாக்கம் மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டு கழகத்தின் (Building materials and Technology Promotion Council-&BMTP) கீழ் செயல்பட்டு வரும். அந்த, என்ற தொழில் நுட்ப மேம்பாட்டுக் கழகமானது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் (Ministry of Housing and Urban Affairs & MoHUA) கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
அனைவருக்கும் வீடு திட்டம்
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமானது 2022– ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டப்படுவதை நோக்கமாகக் கொண்டது. இந்த திட்டத்தை செயல்படும்போது, கீழ்க்கண்ட பல்வேறு வகைகளில் மத்திய நிதி உதவி தேவைப்படும்.
*கூட்டு முயற்சி மலிவு விலை வீடுகள் (Affordable Housing in Partnership AHP)
*பயனாளிகளுடன் இணைக்கப்பட்ட கட்டுமானம் (Beneficiary Linked Construction)
*குடிசைகள் மறுசீரமைப்பு திட்டம் (Insitu Slum Redevelopment)
*மானியத்துடன் கடன் வழங்கும் திட்டங்கள் (Credit Linked Subsidy Schemes)
நிதி வசதி ஏற்பாடு
NUHF அமைப்பானது அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு தேவையான நிதி வசதியை ஏற்படுத்தித் தரும். அதன் மூலம் நகர்ப்புறங்களில் சொந்த வீடு உள்ளவர்கள் மற்றும் சொந்த வீடு இல்லாதவர்கள் ஆகியோருக்கு இடையே உள்ள இடைவெளியை, இந்தத் திட்டத்தின் மூலம் வீடுகள் அமைத்துக்கொடுப்பதன் மூலம் படிப்படியாகக் குறைக்க இயலும்.
நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகம்
இந்த அமைப்பானது சங்கங்கள் பதிவுச் சட்டம் (Societies Registration Act), 1860ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரதான பணி நவீன கட்டுமான தொழில் நுட்ப முறைகளை அறிமுகம் செய்வதாகும். மேலும், அவற்றை அனைவருக்கும் எளிதாக சென்றடையும்படியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.
Related Tags :
Next Story