3 பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள சிரமப்பட்டேன்- ஏபிடி வில்லியர்ஸ்


3 பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள சிரமப்பட்டேன்- ஏபிடி வில்லியர்ஸ்
x

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் 3 பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள தான் சிரமப்பட்டதாக கூறியுள்ளார்.

பிரிட்டோரியா,

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஏபிடி வில்லியர்ஸ். கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இவர் அறிமுகமானார். தற்போதுவரை வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.

அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் அழைக்கப்படுகிறார். இவர் டெஸ்ட், 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகள் என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் 19000-க்கும் மேற்பட்ட ரன்களையும் 47 சதங்களையும் குவித்துள்ளார். இந்நிலையில் தனது கேரியரில் 3 பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள கஷ்டப்பட்டதாக ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

2006-ல் முதல் முறையாக நான் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது ஷேன் வார்னேவை எதிர்கொள்ள எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. நுணுக்கமான பந்துவீச்சு மூலம் தம்முடைய பெயராலேயே பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார். மறுபுறம் அனுபவமின்றி இருந்த நான் அந்த சமயத்தில் அவரிடம் மிகவும் தடுமாறினேன். அதன் பின் வயது அதிகரிக்கும் போது அனுபவமும் அதிகரித்தது.

அதற்கு நிகராக புதிய பவுலரான பும்ரா மிகப் பெரிய சவாலை கொடுத்தார். அதே போல் ரஷித் கானை எதிர்கொள்வதற்கும் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. சில சமயங்களில் அடி வாங்கினாலும் மீண்டும் கம்பேக் கொடுக்கும் திறமையை கொண்டவர் அவர். ஒருமுறை அவரது ஓவரில் நான் 3 சிக்சர்களை அடித்தேன். ஆனால் அவர் அடுத்த பந்திலேயே என்னை அவுட்டாக்கினார். அந்த வகையில் இவர்களைப் போன்ற பவுலர்களை எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமாக உணர்ந்தேன். அதனால் அவர்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது.

என்று அவர் கூறினார்.


Related Tags :
Next Story