எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இவரது பந்து வீச்சை எதிர்கொண்டது கடினமாக இருந்தது - புஜாரா


எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இவரது பந்து வீச்சை எதிர்கொண்டது கடினமாக இருந்தது - புஜாரா
x

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த வீரரின் பந்து வீச்சை எதிர்கொண்டது கடினமாக இருந்தது என புஜாரா கூறியுள்ளார்.


இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் செத்தேஷ்வர் புஜாரா. 2010-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். இவர் இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19 சதங்கள் மற்றும் 34 அரைசதங்களுடன் 7014 ரன்களை குவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணி பேட்டிங் ஆர்டரில் ராகுல் டிராவிட் ஆடிய முக்கியமான 3-ம் வரிசையில் ராகுல் டிராவிட்டின் இடத்தை நிரப்பியவர் புஜாரா. அப்பேர்ப்பட்ட இடத்தை தனது நேர்த்தியான பேட்டிங் மற்றும் மிகச்சிறந்த பொறுமையாலும் நிரப்பியவர் புஜாரா.

ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக தீவிரமாக தயாராகிவரும் புஜாரா, பேட் கம்மின்ஸ் பவுலிங்கை எதிர்கொள்வது மிகக்கடினம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் அவுட்டாகும்போது மட்டும்தான் கோபப்படுவேன். அவுட்டாகும்போது நான் உச்சபட்ச கோபமடைவேன். ஒவ்வொரு முறை அவுட்டாகும்போதும் எனக்கு கோபம் வரும். ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை எதிர்கொள்வது மிகக்கடினமாக இருக்கும்.

என்று புஜாரா கூறியுள்ளார்.


Next Story