ஒரு நல்ல கேப்டனால் மட்டுமே இதை செய்ய முடியும்..! சஞ்சு சாம்சனுக்கு ரவி சாஸ்திரி பாராட்டு ..!


ஒரு நல்ல கேப்டனால் மட்டுமே இதை செய்ய  முடியும்..!   சஞ்சு சாம்சனுக்கு ரவி சாஸ்திரி பாராட்டு ..!
x
தினத்தந்தி 28 April 2023 12:16 PM GMT (Updated: 28 April 2023 12:21 PM GMT)

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது.

ஜெய்ப்பூர்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் ஆட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், தீக்சனா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆடம் சாம்பா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது.

இந்த நிலையில் சஞ்சு சாம்சன் கேப்டனாக முதிர்ச்சியடைந்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ,

சஞ்சு சாம்சன் கேப்டனாக முதிர்ச்சியடைந்துள்ளார். அவர் தனது ஸ்பின்னர்களை நன்றாக பயன்படுத்துகிறார். ஒரு நல்ல கேப்டன் மட்டுமே மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாடி அவர்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்த முடியும். என தெரிவித்துள்ளார்.


Next Story