டிஎன்பிஎல் முதலாவது தகுதி சுற்று: கோவைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு


டிஎன்பிஎல் முதலாவது தகுதி சுற்று: கோவைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது

சேலம்,

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் (12 புள்ளி), திண்டுக்கல் டிராகன்ஸ் (12 புள்ளி), நெல்லை ராயல் கிங்ஸ் (10 புள்ளி), மதுரை பாந்தர்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின. 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (6 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (4 புள்ளி), சேலம் ஸ்பார்டன்ஸ் (4 புள்ளி), பால்சி திருச்சி (0) அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள எஸ்.சி.எப். மைதானத்தில் இன்று அரங்கேறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டாப்-2 இடங்களை பிடித்த கோவை கிங்சும், திண்டுக்கல் டிராகன்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story