பேரையூர் அருகே பரிதாபம்: அரசு பஸ் மோதி சைக்கிளில் சென்ற சிறுவன் பலி

பேரையூர் அருகே அரசு பஸ் மோதியதில் சைக்கிளில் சென்ற சிறுவன் பரிதாபமாக பலியானான். சிறுவன் டி.கல்லுப்பட்டி பி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் நித்தீஸ்குமார் (வயது 9). அங்குள்ள பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தினமும் வீட்டில் இருந

Update: 2016-12-13 22:45 GMT

பேரையூர்,

பேரையூர் அருகே அரசு பஸ் மோதியதில் சைக்கிளில் சென்ற சிறுவன் பரிதாபமாக பலியானான்.

சிறுவன்

டி.கல்லுப்பட்டி பி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் நித்தீஸ்குமார் (வயது 9). அங்குள்ள பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருவது வழக்கம்.

இதன்படி நேற்று மாலை நித்தீஸ்குமார் பள்ளி முடிந்து வன்னிவேலாம்பட்டி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது சின்னாரெட்டியிலிருந்து டி.கல்லுப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் சைக்கிள் மீது மோதியது.

பலி

இதில் தவறி கீழே விழுந்த நித்தீஸ்குமார் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கிறது. இதில் அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்