திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி

Update: 2016-12-13 22:30 GMT
திருவாரூர்,

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரம், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகள் குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப் பட்டது. இதில் மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுந்தர், நிர்வாக அலுவலர்கள் கல்யாணி, பன்னீர்்செல்வம், மருந்து கிடங்கு அலுவலர் ஆண்டாள், செவிலிய கண்காணிப்பாளர் சகாயராணி மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்