அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகிகள் கூட்டம்

Update: 2016-12-20 22:30 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் செல்வபாண்டியன், மாவட்ட துணைத்தலைவர் வீரையன், மாவட்ட இணைச்செயலாளர்கள் இளங்கோவன், கார்த்தி, மாவட்ட துணைச்செயலாளர் பாஸ்கர், திருவாரூர் நகர தலைவர் ஞானச்சந்திரன், நகர செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனடர். கூட்டத்தில் ஜெயலலிதாவின் கனவை நினைவாக்கிட சசிகலா, கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று தொண்டர்களை வழி நடத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்