2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் காயம் அடைந்த பெண் சாவு

சென்னை ஆவடியை அடுத்த சேக்காட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி கஸ்தூரி(வயது 35). இவர் கடந்த 15-ந்தேதி தன்னுடைய மகன் முத்துவுடன் மோட்டார் சைக்கிளில் வண்டலூர் நோக்கி சென்றார்.

Update: 2017-01-18 23:55 GMT
திருவள்ளூர்,

சென்னை ஆவடியை அடுத்த சேக்காட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி கஸ்தூரி(வயது 35). இவர் கடந்த 15-ந்தேதி தன்னுடைய மகன் முத்துவுடன் மோட்டார் சைக்கிளில் வண்டலூர் நோக்கி சென்றார். திருவள்ளூரை அடுத்த காவல்சேரி சர்வீஸ் சாலையில் சென்ற போது எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் 2 பேருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் கஸ்தூரி இறந்தார். முத்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்