குடிநீர் வினியோகம் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன், வருவாய் நிர்வாக கமி‌ஷனர் ஆய்வு

பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் சீராக இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு வருவாய் நிர்வாக கமி‌ஷனர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Update: 2017-02-18 21:34 GMT
சென்னை,

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் சீராக இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு வருவாய் நிர்வாக கமி‌ஷனர் கொ.சத்யகோபால் சம்பந்தப்பட்ட துறை தலைவர்களுடன் இணைந்து வாரந்தோறும் மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னை, சேப்பாக்கம் வருவாய் நிர்வாக அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் அவர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வறட்சி மற்றும் குடிநீர் வினியோகம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மாவட்ட வாரியாக தற்போது உள்ள நிலவரம் குறித்தும், குடிநீர் வினியோகத்தினை சீராக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், குடிநீர் வினியோகத்திற்காக நடைபெறும் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிலவரத்துக்கு ஏற்ப தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கலெக்டர்களை அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்