ராயப்பேட்டை அருகே லாரி மோதி சட்டக்கல்லூரி மாணவர் பலி; டிரைவர் கைது

ராயப்பேட்டை அருகே லாரி மோதியதில் சட்டக்கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். விபத்து தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-02-18 21:39 GMT
சென்னை,

ராயப்பேட்டை அருகே லாரி மோதியதில் சட்டக்கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். விபத்து தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சட்டக்கல்லூரி மாணவர் சாவு

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் காந்தி. இவருடைய மகன் மனோஜ்குமார்(வயது 29). சட்டக் கல்லூரி மாணவரான இவர் நேற்று நண்பர் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அவர் ராயப்பேட்டை வள்ளுவர் சிலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்ட மனோஜ்குமார் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

லாரி டிரைவர் கைது

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் மனோஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து எர்ணாவூரை சேர்ந்த லாரி டிரைவரான வேலாயுதம்(45) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்