ஆவடி அருகே பரிதாபம்: மின்சார ரெயில் மோதி தச்சுத்தொழிலாளி பலி

ஆவடி அடுத்த சேக்காடு வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 62). தச்சுத்தொழிலாளி.

Update: 2017-02-18 21:43 GMT
ஆவடி,

ஆவடி அடுத்த சேக்காடு வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 62). தச்சுத்தொழிலாளி. இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பாஸ்கல் கிராமம்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரெயில் நிலையம் அருகே பொன்னுசாமி ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த பொன்னுசாமிக்கு அமுதா (52) என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்