சென்னை விமான நிலையத்திற்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் நேற்று மாலை 2 குரங்குகள் திடீரென புகுந்து விட்டன.

Update: 2017-02-19 22:35 GMT

ஆலந்தூர்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் நேற்று மாலை 2 குரங்குகள் திடீரென புகுந்து விட்டன. இந்த குரங்குகள் அங்கும் இங்குமாக மேற்கூரை பகுதியில் தாவிக்குதித்து அட்டகாசம் செய்தன. இதை கண்ட பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனையடுத்து குரங்குகளை பிடிக்க விமான நிலைய தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து, 18–வது நுழைவுவாயில் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து குரங்குகளை பிடிக்க தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் பிடிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் விமான நிலையத்திற்குள் குரங்குகள் புகுந்தன. அவற்றை கூண்டு வைத்து வனத்துறை அதிகாரிகள் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்