பேரளத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 956 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது

பேரளத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 956 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது

Update: 2017-02-27 22:30 GMT
நன்னிலம்,

பேரளத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 956 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக நேற்று சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி நன்னிலம், வலங்கைமான், திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 956 டன் நெல் மூட்டைகள், லாரிகள் மூலம் பேரளம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏற்றினர். அதனைத் தொடர்ந்து சரக்கு ரெயில் 956 டன் நெல் மூட்டைகளுடன் பேரளத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்