கும்பகோணத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2017-03-08 22:45 GMT
கும்பகோணம்,

ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்திய அரசு நீதி விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று தமிழகம் முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகே ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரத போராட்டத்துக்கு திருவிடைமருதூா் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தவமணி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மீனவா் பிரிவு மாநில செயலாளா் முனுசாமி கலந்து கொண்டு பேசினார். இதில் பாபநாசம் சட்டசபை தொகுதி செயலாளா் கருணாநிதி, நகர முன்னாள் பாசறை செயலாளா் தீபன், முன்னாள் நகரசபை உறுப்பினா் அம்பிகாபதி, சுவாமிமலை பேரூராட்சி முன்னாள் துணை தலைவா் கல்யாணகுமாா் உள்பட ஆயிரக்கணக் கானோா் கலந்து கொண்டனா். 

மேலும் செய்திகள்