அம்பத்தூரில் வீடு, மனைகள் விற்பனையாளர்கள், முகவர்கள் ஆர்ப்பாட்டம் சீமான் பங்கேற்பு

தமிழ்நாடு வீடு, மனைகள் விற்பனையாளர்கள், முகவர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு மீண்டும்

Update: 2017-03-24 22:49 GMT

ஆவடி,

பட்டாமனைகளை பத்திரபதிவு செய்ய ஆணை வழங்க வலியுறுத்தி அம்பத்தூர் உழவர் சந்தை அருகே நேற்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறுகையில் ‘‘ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு வேட்பாளரை ஆதரித்து முதல்–அமைச்சர் பிரசாரம் செய்வது தவறு. இதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். எங்களுக்கு சின்னம் முக்கியம் இல்லை. எண்ணம் தான் முக்கியம்’’ என்றார்.

மேலும் செய்திகள்