ஆர்.கே.நகரில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த மொபட் தீயில் எரிந்து நாசம்

சென்னை ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 32). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

Update: 2017-03-24 23:00 GMT

ராயபுரம்,

நேற்று முன்தினம் இரவு தனது மொபட்டை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்க சென்றுவிட்டார்.

நேற்று அதிகாலையில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த அவரது மொபட் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மொபட்டில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் மொபட் முற்றிலும் எரிந்து நாசமானது.

மர்மநபர்கள் யாராவது வேண்டுமென்றே லட்சுமணனின் மொபட்டை தீ வைத்து எரித்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்