அம்பத்தூரில் பூட்டிய வீட்டுக்குள் முதியவர் மர்மசாவு

அம்பத்தூர் பாரதி நகர் முதல் தெருவில் பூட்டிய வீட்டுக்குள் முதியவர் மர்மசாவு

Update: 2017-03-26 22:15 GMT

ஆவடி

அம்பத்தூர் பாரதி நகர் முதல் தெருவில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தவர் சந்திரசேகர் (வயது 69). கடந்த 2 நாட்களாக இவரது வீடு பூட்டியே கிடந்தது. அவர் வெளியே வரவில்லை.

இந்தநிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் பார்த்தசாரதி, சந்திரசேகர் வசித்து வந்த வீட்டின் கதவை தட்டினார். நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. கதவு உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. எனவே ஜன்னலை திறந்து உள்ளே எட்டி பார்த்தார்.

அப்போது வீட்டின் உள்ளே நாற்காலியில் அமர்ந்த நிலையில் சந்திரசேகர் மர்மமான முறையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது உடல் உப்பிய நிலையில் இருந்தது. எனவே அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சந்திரசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரின் மர்மசாவு குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்