சித்தாலபாக்கத்தில் தீ விபத்தில் 3 குடிசைகள் எரிந்து சாம்பல்

சென்னையை அடுத்த சித்தாலபாக்கத்தில் தீ விபத்தில் 3 குடிசைகள் எரிந்து சாம்பல்

Update: 2017-03-26 21:00 GMT

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த சித்தாலபாக்கம் காவல் உதவி மையத்தின் அருகே உள்ள 3 குடிசைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த வேளச்சேரி தீயணைப்பு நிலைய வீரர்கள், குடிசைகளில் எரிந்த தீயை அணைத்தனர். தீ விபத்தில் 3 குடிசைகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்