மின்மோட்டார்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பை நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மின்மோட்டார்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பை நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-03-30 21:00 GMT

அம்பை,

மின்மோட்டார்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பை நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

முற்றுகை

அம்பை நகரசபை பகுதிகளில் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய மின்மோட்டார்களை நகரசபை அலுவலர்கள் பறிமுதல் செய்து வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நகரசபை 7, 8, 15, 17, 18 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் 300–க்கும் மேற்பட்டோர் அம்பை நகரசபை அலுவலகத்தில் திரண்டனர். அங்கு சமுதாய தலைவர் சபாபதி, முன்னாள் நகரசபை தலைவி சுமதி ஆகியோர் தலைமையில் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நகரசபை தலைமை எழுத்தர் அன்பழகனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:–

மின்மோட்டார்கள் அகற்றுவதில் அலுவலர்கள் பாரபட்சமாக செயல்படுவதாவும், முன் அறிவிப்பு இன்றி ஊழியர்கள் ஆண்கள் இல்லாத நேரத்தில் வீடு புகுந்து மின்மோட்டார்களை பறிமுதல் செய்கின்றனர். வார்டு வாரியாக மின்மோட்டார்களை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறிஇருந்தனர்.

பரபரப்பு

இதுகுறித்து ஆணையாளரிடம் பேசி, பறிமுதல் செய்யப்பட்ட மின்மோட்டார்களை திரும்ப தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்