வல்லூர் அனல் மின்நிலைய 3–வது யூனிட்டில் மின் உற்பத்தி பாதிப்பு

மீஞ்சூரை அடுத்த வல்லூரில் அனல் மின்நிலைய 3–வது யூனிட்டில் மின்உற்பத்தி பாதிப்பு

Update: 2017-04-01 22:30 GMT

மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த வல்லூரில் தேசிய அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு 3 யூனிட்டுகளில் தலா 500 மெகாவாட் வீதம் 1,500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பாதிப்பால் 3–வது யூனிட்டில் 500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் 2–வது யூனிட்டில் 500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்