சொத்துக்காக மூதாட்டியை அடித்து கொன்ற மகன் கைது

வேதாரண்யம் அருகே சொத்துக்காக மூதாட்டியை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-06-08 22:15 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள குரவப்புலம் தெற்குகாடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ரத்தினம்(வயது 65). பாலகிருஷ்ணன் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று ரத்தினம் தனது இளைய மகன் முத்துராமன் வீட்டிற்கு வந்தார். அப்போது மர்மமான முறையில் அவர் இறந்தார். இந்தநிலையில் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக ரத்தினத்தின் மூத்த மருமகள் காந்திமதி வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அருணாசலம், சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ரத்தினத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

மகன் கைது

இந்த நிலையில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள சொத்துக்காக முத்துராமன், ரத்தினத்தை கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முத்துராமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக மூதாட்டியை மகன் கல்லால் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்