சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பாயஸ் குரேசி(வயது30). இவர் மும்பை டோங்கிரி பகுதியில் கடை நடத்தி வருகிறார்.

Update: 2017-06-12 20:38 GMT

மும்பை,

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பாயஸ் குரேசி(வயது30). இவர் மும்பை டோங்கிரி பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவர் அண்மையில் அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை கடைக்குள் வைத்து கற்பழித்தார். மேலும் தொடர்ந்து அவர் மிரட்டி சிறுமியை கற்பழித்து வந்தார். இதனால் சிறுமி கர்ப்பம் ஆனாள். இதையறிந்து சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து நாக்பாடா போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய பாயஸ் குரேசியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்