நமத்தோடு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்

சேத்துப்பட்டு தாலுகா நமத்தோடு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

Update: 2017-06-21 21:30 GMT

சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டு தாலுகா நமத்தோடு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். சேத்துப்பட்டு தாசில்தார் சாந்தி, சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்மணி, தலைமையிடத்து தாசில்தார் ஓம் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் காயத்ரி வரவேற்றார்.

முகாமில் வீட்டுமனை பட்டா, பட்டாமாறுதல், விதவை, வாரிசு, சிறு விவசாயி சான்றிதழ், விதவை, முதியோர் உதவித்தொகை, வேளாண் உபகரணங்கள் என பொதுமக்களிடமிருந்து 92 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 72 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டன. மீதமுள்ள 20 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. தீர்வு காணப்பட்ட 72 மனுக்களின் பயனாளிகளுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் சுகாதார ஆய்வாளர் புனிதவேலன், சமூக நலத்துறை விரிவு அலுவலர் ஞானம்மாள், வேளாண்மைத்துறை விரிவு அலுவலர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மனுநீதிநாள் முகாமில் காய்கனி ஊட்டச்சத்து கண்காட்சி, மலேரியா விழிப்புணர்வு கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இதனை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்