மணல் கடத்தல்; 4 லாரிகள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் மணல் கடத்தி வந்த 4 லாரிகளை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 4 லாரிகளை போலீசார் மடக்கிப்பிடித்தனர். டிரைவர்கள் லாரியை விட்டு விட்டு கீழே இறங்கி தப்பிச்சென்று விட்டனர். மணலுடன் 4 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.