அரசு அதிகாரிகள், மாணவர்கள் யோகா பயிற்சி

காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும், பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகளும், அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-21 21:13 GMT
காரைக்கால், 

காரைக்கால் மாவட்ட நிர்வாகம், புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை, நலவழித்துறை, கடலோரக் காவல்படை மற்றும் ஆயுஷ் இணைந்து காரைக்கால் கடற்கரை சாலையில் 3வது அகில உலக யோகா தினவிழாவை கொண்டாடின. நிகழ்ச்சியில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர் பார்த்திபன், சார்பு கலெக்டர் கேசவன், துணை கலெக்டர் நாகராஜன், மண்டல போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகசுந்தரம், செயற்பொறியாளர் ராஜசேகரன், நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் நாராயணசாமி மற்றும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும், பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகளும், அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். யோகா பயிற்சியாளர் மாரியப்பன் யோகா நிகழ்ச்சிகளை நடத்தினார்.

மேலும் செய்திகள்