மத்திய அரசு அதிகாரி வேலை

மொழிப் பிரிவில் பட்டப்படிப்பு படித்திருப்பதுடன், முதுநிலை இதழியல் மற்றும் மாஸ் கம்யூனிகேசன் போன்ற முதுநிலை டிப்ளமோ படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2017-06-26 06:35 GMT
த்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி., தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ‘இந்திய தகவல் சேவை’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது குரூப்-பி பிரிவில் வரும் கெஜட்டட் அரசு அதிகாரி பணியிடங்களாகும். இந்தி, ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, ஒரியா, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, அசாமி, பஞ்சாபி, காஷ்மீரி, மணிப்புரி போன்ற 15 மொழிகளில் மொத்தம் 72 பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

பணியிடங்கள் உள்ள மொழிப் பிரிவில் பட்டப்படிப்பு படித்திருப்பதுடன், முதுநிலை இதழியல் மற்றும் மாஸ் கம்யூனிகேசன் போன்ற முதுநிலை டிப்ளமோ படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 29-6-2017-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.upsconline.nic.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்