காஞ்சீபுரத்தில் பெண் அடித்துக்கொலை கணவர் கைது

காஞ்சீபுரத்தில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது கணவரை கைது செய்தனர்.

Update: 2017-07-09 22:00 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பூக்கடைசத்திரம் கிழக்கு ராஜதெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 57). டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பவானி (55). இவர்களுக்கு சிவராஜ் (32) என்ற மகனும் மோகனா(27) என்ற மகளும் உள்ளனர். முருகன் குடிப்பழக்கம் உடையவர். நேற்று மதியம் முருகன், பவானி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த முருகன் உருட்டுக்கட்டையால் பவானியை தாக்கினார். படுகாயம் அடைந்த பவானி ரத்தவெள்ளத்தில் சரிந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பவானியை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பவானி பரிதாமாக இறந்தார்.

இதுகுறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த கணவர் முருகனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்