பம்மலில் தே.மு.தி.க. கண்டன ஆர்ப்பாட்டம்

பம்மல் இரட்டை பிள்ளையார் கோவில் அருகே காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-07-24 04:00 GMT

தாம்பரம்,

சென்னையை அடுத்த பம்மல் இரட்டை பிள்ளையார் கோவில் அருகே காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்களுக்கு துரோகம் விளைவித்த மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும், கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமை தாங்கினார்.

இதில் மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் காளிராஜன், பம்மல் நகர செயலாளர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய–மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

மேலும் செய்திகள்