சென்னை திருமங்கலத்தில் 2 பெண்களிடம் சங்கிலி பறித்த கொள்ளையர்கள் உருவப்படம் போலீசார் வெளியிட்டனர்

சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள அன்னை பிளாட்ஸ் மற்றும் வள்ளலார் குடியிருப்பு பூங்கா ஆகிய 2 இடங்களில் தனியாக நடந்து சென்ற 2 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் தங்க சங்கிலிகளை பறித்து சென்றனர்.

Update: 2017-07-24 03:30 GMT

சென்னை,

சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள அன்னை பிளாட்ஸ் மற்றும் வள்ளலார் குடியிருப்பு பூங்கா ஆகிய 2 இடங்களில் கடந்த மாதம் 29–ந்தேதி தனியாக நடந்து சென்ற 2 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் தங்க சங்கிலிகளை பறித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான சங்கிலி பறிப்பு கொள்ளையர்களின் உருவ படத்தை தற்போது போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

இந்த சந்தேகக்ஷ நபர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் திருமங்கலம் சரக உதவி கமி‌ஷனருக்கு 9940055155 என்ற எண்ணிலும், திருமங்கலம் இன்ஸ்பெக்டருக்கு 9940322999 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்