பஸ் கவிழ்ந்து விபத்து; 5 பேர் படுகாயம்

செங்கம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-08-08 22:45 GMT
செங்கம்,

பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி நேற்று அதிகாலை அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சை ஊத்தங்கரையை சேர்ந்த வெங்கடேசன் (வயது 48) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 37 பேர் பயணம் செய்தனர்.

செங்கத்தை அடுத்த கண்ணக்குருக்கை அருகே பஸ் வந்துக் கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சின் பின்பக்க சக்கரத்தின் அச்சு முறிந்தது. இந்த விபத்தில் சுரேஷ், கவுரி, அங்கமுத்து, அருள், நாகராஜ் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவர் வெங்கடேசனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்