செங்குன்றம் அருகே அரிய வகை வெளிநாட்டு பறவை ரத்தக்காயங்களுடன் பிடிபட்டது
செங்குன்றம் அருகே உள்ள வடகரை போலீஸ் உதவி மையம் அருகே நேற்று முன்தினம் இரவு
செங்குன்றம்,
வெளிநாட்டு பறவை ஒன்று கீழே விழுந்து உடலில் ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை பார்த்து அந்த பகுதிக்கு திரண்டு வந்த மக்கள் அந்த பறவையை மீட்டு வேளச்சேரியில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் அந்த பறவைக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். ரத்தக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பறவை அரிய வகையை சேர்ந்த வெளிநாட்டு பறவையாகும்.