போலீஸ்காரர் மீது தாக்குதல் கூலித்தொழிலாளி கைது; 2 பேர் தப்பி ஓட்டம்
சென்னை மெரினா போலீஸ்நிலையத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் அகிலன். இவர் நேற்று முன்தினம் இரவு பீச் பக்கி வாகனம் மூலம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
சென்னை,
அப்போது குடிசைமாற்று வாரியம் அலுவலகம் எதிரே உள்ள கடற்கரை மணற்பரப்பில் 3 பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களை அகிலன் எச்சரித்தார்.
மதுபோதையில் இருந்த 3 பேரும் அகிலனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அகிலன் முகத்தில் ரத்தக்காயம் ஏற்பட்டது. பின்னர் 3 பேரும் தப்ப முயற்சித்தனர். அப்போது ஒருவர் பொதுமக்கள் பிடியில் சிக்கினார். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிப்பட்ட நபரை மெரினா போலீஸ்நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருமங்கலம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அரிராம்(வயது 29) என்பதும், தப்பியோடியது அவருடைய நண்பர்கள் சதீஷ், தினேஷ் என்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
அப்போது குடிசைமாற்று வாரியம் அலுவலகம் எதிரே உள்ள கடற்கரை மணற்பரப்பில் 3 பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களை அகிலன் எச்சரித்தார்.
மதுபோதையில் இருந்த 3 பேரும் அகிலனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அகிலன் முகத்தில் ரத்தக்காயம் ஏற்பட்டது. பின்னர் 3 பேரும் தப்ப முயற்சித்தனர். அப்போது ஒருவர் பொதுமக்கள் பிடியில் சிக்கினார். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிப்பட்ட நபரை மெரினா போலீஸ்நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருமங்கலம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அரிராம்(வயது 29) என்பதும், தப்பியோடியது அவருடைய நண்பர்கள் சதீஷ், தினேஷ் என்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.