கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு

கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் தேசிய குற்ற பதிவேடு துறை டி.ஐ.ஜி. டாக்டர் பிரணாவ் குப்தா திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.

Update: 2017-09-23 22:15 GMT

கல்பாக்கம்,

 போலீஸ்நிலைய கம்ப்யூட்டர் அறைக்கு சென்ற அவர் போலீஸ் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள், அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், குற்றவாளிகள் குறித்த தகவல்கள் மற்றும் பாஸ்போட் விண்ணப்பங்கள் உள்பட பல்வேறு பதிவுகள் குறித்து நீண்ட நேரமாக ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் மாநில குற்ற பதிவேடு துறை (சென்னை) ஆய்வாளர் செல்வகுமார் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்