நெடுஞ்சாலைத்துறையில் பணி

தேசியநெடுஞ்சாலை ஆணையம் சுருக்கமாக என்.எச்.ஏ.ஐ. என அழைக்கப்படுகிறது.

Update: 2017-09-25 09:30 GMT
 சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது துணை மேலாளர் (தொழில்நுட்பம்) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். சிவில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு சேர்க்கப்படுவார்கள்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 28-10-2017-ந்தேதி. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nhai.org என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்