நாமக்கல்லில் மர்ம காய்ச்சலுக்கு மாணவி சாவு

நாமக்கல்லில் மர்ம காய்ச்சலுக்கு மாணவி பரிதாபமாக இறந்தாள்.

Update: 2017-10-09 22:30 GMT
நாமக்கல்,

நாமக்கல் மஜித்தெருவை சேர்ந்தவர் சாகுல், பெயிண்டர். இவரது மனைவி சகிலாபானு. இவர்களின் மகள் பர்கீத் (வயது 10). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி பர்கீத் மர்ம காய்ச்சலால் அவதிபட்டு வந்தாள். அவளை பெற்றோர் சேலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

பரிதாப சாவு

இந்த நிலையில் சிகிச்சை பலன்இன்றி பர்கீத் நேற்று பரிதாபமாக இறந்தாள். அந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி பர்கீத்துக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி கடந்த 6-ந் தேதி அவரது உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது. 

மேலும் செய்திகள்