புழல் அருகே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

சென்னையை அடுத்த புழல் புத்தகரம் விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சேட்டு(வயது 23). கட்டிட தொழிலாளி.

Update: 2017-10-15 22:30 GMT

செங்குன்றம்,

நேற்று முன்தினம் இரவு புழலில் இருந்து செங்குன்றம்–செம்பியம் சாலையில் மோட்டார் சைக்கிளில் புத்தகரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

விநாயகபுரம் அருகே வந்த போது, எதிரே சென்னை பாரிமுனையில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்த மாநகர பஸ்(தடம் எண்: 242) மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சேட்டு மீது மாநகர பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய சேட்டு, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்–இன்ஸ்பெக்டர் அருணகிரி ஆகியோர் பலியான சேட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான ஊத்துக்கோட்டையை அடுத்த நெல்வாயல் கிராமத்தைச் சேர்ந்த பாபு(39) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்