கோவில்பட்டியில் 778 மாணவ–மாணவிகளுக்கு மடிக்கணினிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

கோவில்பட்டியில் 778 மாணவ–மாணவிகளுக்கு மடிக்கணினிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

Update: 2017-10-28 21:30 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் 778 மாணவ–மாணவிகளுக்கு மடிக்கணினிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

நாடார் மேல்நிலைப்பள்ளி

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளிக்கூட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். நாடார் உறவின்முறை சங்க துணை தலைவர் செல்வராஜ், பொருளாளர் சுரேஷ்குமார், பள்ளிக்கூட பொருளாளர் சண்முகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வடிவேல் வரவேற்று பேசினார். செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ 454 மாணவ–மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு, தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், நகரசபை ஆணையாளர் அச்சையா, பொதுநல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமச்சந்திரன், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், கூட்டுறவு வங்கி தலைவர் அன்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கம்மவார் பள்ளி–வ.உ.சி. அரசு பள்ளி

பின்னர் கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் நடந்த விழாவில் 132 மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். பள்ளிக்கூட செயலாளர் கதிர்வேல், பள்ளிக்கூட கமிட்டி உறுப்பினர்கள் ரத்தினசாமி, ஆழ்வார்சாமி, தலைமை ஆசிரியை விக்னேசுவரி, உதவி தலைமை ஆசிரியை கஸ்தூரிபாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் நடந்த விழாவில் 192 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். தலைமை ஆசிரியர் முனியசாமி, உதவி தலைமை ஆசிரியர் ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்