ஒகி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மீனவர்கள் அஞ்சலி

ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த குமரி மாவட்ட மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் உவரியில் நேற்று இரவு நடந்தது.

Update: 2017-12-12 22:45 GMT

திசையன்விளை,

ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த குமரி மாவட்ட மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் உவரியில் நேற்று இரவு நடந்தது. உவரி அந்திரேயா ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பங்கு தந்தை ஜோசப் அடிகள் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலமானது கப்பல் மாதா ஆலயம், வேளாங்கன்னி மாதா ஆலயம் வழியாக புனித அந்தோணியார் ஆலய திடலை அடைந்தது. அங்கு உயிர் இழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி தெரிவித்து இரங்கல் பாடல் பாடப்பட்டது. அதனை தொடர்ந்து கடலில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்