காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்; 2 லாரிகள் சிக்கின

காஞ்சீபுரத்தை அடுத்த புரிசை பகுதியில் காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-31 22:05 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த புரிசை பகுதியில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தியது தெரிய வந்தது.

போலீசாரை பார்த்ததும் லாரியின் டிரைவர் மற்றும் கிளீனர்கள் தப்பி ஓடிவிட்டனர். மணல் கடத்தி வந்த 2 லாரிகளையும் போலீசார் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்