பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரவேண்டும், லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-02-08 04:38 GMT
சென்னை,

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் யுவராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டம் குறித்து எம்.ஆர்.குமாரசாமி, யுவராஜ் கூறியதாவது:-

பெட்ரோல்-டீசல் விலை யை தினந்தோறும் உயர்த்துவதை மாற்றி 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் செய்ய வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து நாடுமுழுவதும் ஒரே விலை என்ற முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக அரசு டீசலுக்கான வாட் வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே லாரி தொழில் வளர்ச்சி அடைய மத்திய, மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்