ரூ.400 கோடி மோசடி தம்பதி உள்பட 4 பேர் சிக்கினர்

சாகர் என்பவர் ஸ்ரீராம் சமுத்ரா என்ற பெயரில் நிதிநிறுவனம் ஒன்று நடத்தி வந்தார். இவர் 2 மடங்கு பணம் திருப்பி தருவதாக கூறி 4 ஆயிரம் பேரிடம் சுமார் ரூ.400 கோடி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Update: 2018-03-08 22:02 GMT
தானே,

பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து  அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு சாகர், அவரது மனைவி அங்கா மற்றும் உறவினர் 2 பேரை கைது செய்தனர். மேலும் நிதிநிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர். இந்த மோசடி குறித்து 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்