சட்டவிரோதமாக ரெயில்வே இ-டிக்கெட்டுகள் பதிவு செய்தவர் கைது

மும்பை ஒஷிவாராவில் உள்ள ஒரு அலுவலகத்தில் சட்டவிரோதமாக ரெயில்வே டிக்கெட்டுகள் பதிவு செய்யப்படுவதாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

Update: 2018-05-04 23:30 GMT
மும்பை,

ரெயில்வே கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த அலுவலகத்தில் சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது, அங்கு சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி 6 ஆயிரத்து 603 டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 47 லட்சம் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சட்டவிரோதமாக ரெயில் டிக்கெட்டுகள் பதிவு செய்தவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் அங்கிருந்த ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள 80 ரெயில்வே இ-டிக்கெட்டுகள் மற்றும் மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும் செய்திகள்