கர்நாடகத்தில் வருகிற 8-ந் தேதி நரேந்திர மோடி-சோனியா காந்தி போட்டி பிரசாரம்

கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பா.ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2018-05-05 23:58 GMT
பெங்களூரு,

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், வருகிற 8-ந் தேதி கர்நாடகத்தில் பிரதமர் நரேந்திர மோடி-சோனியா காந்தி ஆகியோர் போட்டி பிரசாரம் மேற்கொள்கிறார்கள். 2 பேரும் ஒரே நாளில் விஜயாப்புராவில் வாக்கு வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.

அதாவது, வருகிற 8-ந் தேதி காலை 11 மணிக்கு விஜயாப்புரா அருகே உள்ள சாரவாடா கிராமத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

அதே நாளில் மாலை 3 மணிக்கு விஜயாப்புரா நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சோனியாகாந்தி கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு வேட்டை நடத்துகிறார். 

மேலும் செய்திகள்