நாகையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-05-12 08:00 GMT
நாகப்பட்டினம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் சரபோஜி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாண்டியன் பேசினார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், 2016-2017-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்காத காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தை சேர்ந்த மதன், ராமலிங்கம், சசி ரேகா, மல்லிகா, சரோஜினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்