உடுமலையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு பெரிய குளம் அருகே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும் தாக்கப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-05-12 21:30 GMT

உடுமலை,

தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள பொம்முநாயக்கன்பட்டியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும் தாக்கப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டியும் உடுமலையில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில செயலாளர் சி.எம், அண்ணாத்துரை, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் வீரப்பன், பாலாஜி, ராஜ்குமார், பப்பீஸ் பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்