பிரபல ரவுடிகள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நடவடிக்கை

பிரபல ரடிவுகள் 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-05-12 21:55 GMT
சென்னை,

சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பிரபல ரடிவுகள் சரவணன்(என்கிற) பாம் சரவணன் (வயது 41), கார்த்திக்(என்கிற) பல்பம் கார்த்திக்(31), ஜெபசேகர் (35) ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இதில் பாம் சரவணன் மீது 8 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. அவர் மீது ஏற்கனவே 6 முறை குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பல்பம் கார்த்திக் மீது 3 கொலை வழக்குகள் உள்பட பல வழக்குகள் இருக்கிறது. அவர் 5 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்துள்ளார். ஜெபசேகர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 18 வழக்குகள் உள்ளது. அவர் மீது 2 முறை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்