மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்து வந்த காவலாளி கைது

வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்து வந்த காவலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-05-15 22:58 GMT
மும்பை,

மும்பை பாந்திரா, மவுன்ட் மேரி ஆலயம் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் 53 வயது மனநலம் பாதித்த பெண் ஒருவர் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று மனநலம் பாதித்த பெண்ணை பார்க்க அவரது மகள் வந்திருந்தார்.

இந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டது. இதனால் தூக்கத்தில் இருந்து எழுந்த அவரது மகள் பார்த்தபோது மர்மநபர் ஒருவர் கதவை திறக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் உதவி கேட்டு சத்தம் போட்டார். இதனால் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து அவர் குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது கட்டிட காவலாளி ராம் (வயது32) மனநலம் பாதித்த பெண்ணின் வீட்டு கதவை கள்ளச்சாவி மூலம் திறக்க முயன்றது தெரியவந்தது. மேலும் அவர் அடிக்கடி நள்ளிரவு நேரத்தில் கள்ளச்சாவியை பயன்படுத்தி மனநலம் பாதித்த பெண்ணின் வீட்டிற்குள் சென்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில் காவலாளி இரவு நேரத்தில் மனநலம் பாதித்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரை கற்பழித்து வந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காவலாளி ராமை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்