அடி, தடியில் ஈடுபட்ட தந்தை, மகன்கள் உள்பட 5 பேர் கைது

அடி, தடியில் ஈடுபட்ட தந்தை, மகன்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-05-16 20:46 GMT
மும்பை,

மும்பை மான்கூர்டை சேர்ந்தவர் சஞ்சய் சசானே (வயது46). இவரது மகன்கள் பிரதீப் (21), ரமேஷ் (19). இந்தநிலையில் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் தனது வீட்டருகில் சென்று கொண்டிருந்த ரமேஷ் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த மெபூஸ்கான், முஸ்தபா சேக் ஆகிய இரண்டு பேர் மீது இடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த இருவரும் ரமேசை சத்தம் போட்டு உள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென மோதல் உண்டானது.இதனால் அவரது சத்தம் கேட்டு சஞ்சய் சசானே, பிரதீப் இருவரும் ஓடி வந்து அடி, தடியில் ஈடுபட்டனர். இந்த மோதலில் மெபூஸ்கான், முஸ்தபா சேக், பிரதீப் ஆகிய மூன்று பேர் காயம் அடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோதலில் தொடர்புடைய தந்தை, மகன்கள் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்