பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார் முன்னிலை வகித்தார். நகர தலைவர் வெற்றிசெல்வன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தமிழ் அரசு, புருஷோத்தமன், அன்பு, மோகன், காமராஜ், மாவட்ட துணைத்தலைவர் மணி, ராஜ், சீனிவாசன், பொருளாளர் சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.